மேல்மருவத்தூரில் குண்டலினி தியானம்
- kuttan Deveshwar
- May 15, 2023
- 1 min read
குண்டலினி
அம்மாவின் அருள் ஆணைபடி, சித்தர் மற்றும் சக்தி பீடங்களின் கருவறையின் பின்புறம் அமர்ந்து தியானம் செய்கிறோம்.

அந்த சுவரில் குண்டலினி வடிவில் மூன்றரை சுற்று கொண்டு எழுந்தருளிகின்ற அம்மாவை காண்கிறோம்.
தேவியர் இருவர் அருகில் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.

விளக்குகள் இரண்டு புரத்தில் இருந்து ஒளி வீசுகின்றன.
"ஓம் குண்டலி வடிவில் குலவினை போற்றி ஓம்" என்பது மந்திரம்.

இந்த இடத்தில் தியானம் செய்தால், அங்கு குண்டலினியாக விளங்கும் அம்மாவின் சக்தி, நம் மூலாதாரத்தில் வளைந்து, பிரகாசமாக குலவி உறங்கும் குண்டலினியை எழுப்ப உதவுகிறது.
மூலாதாரத்திலிருந்து சுவாதிட்டான

ம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு நிலைகளை கடந்து, சகஸ்ராரத்தில் அமுதமாக கொட்டுகிற நிலையில், நாம் தியானத்தில் அன்னையை பார்க்கலாம்.
குருவடி சரணம்! திருவடி சரணம்! ஓம் சக்தி!
Comments